ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்த வில்லன் வேடத்தில் நடித்து தென்னிந்திய மொழி ரசிகர்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் ராணா. தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் விமானப்பயணம் மேற்கொண்ட ராணா ஹைதராபாத்தில் வந்து இறங்கியபோது தன்னுடைய லக்கேஜ் ஒன்று மிஸ் ஆனதை கவனித்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த விமான ஊழியர்களிடம் கேட்டபோது அவருடைய லக்கேஜ் எப்படி மிஸ் ஆகி இருக்கக்கூடும் என்பது பற்றி கூட யாராலும் தகவல் சொல்ல முடியாமல் கையை பிசைந்துள்ளனர்.
இதுபற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராணா, இந்தியாவிலேயே மிக மோசமான விமான சர்வீஸ் என்று சம்பந்தப்பட்ட பிரபல விமான நிறுவனத்தை விமர்சித்துள்ளார். இதையடுத்து அந்த விமான நிறுவனம் ராணாவிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறியதுடன் விரைவில் மிஸ் ஆன அவரது லக்கேஜையும் கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்துள்ளது.